அமைதியாக இருங்கள் என்கிறார் நரேந்திர மோதி; அமித்ஷா பதவி விலக கோருகிறார் சோனியா

இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய வன்முறையில் 22 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்து பிரதமர் நரேந்திரமோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அமைதியும், நல்லிணக்கமும் நமது விழுமியங்களின் மையப் பகுதி. எனது டெல்லி சகோதரிகளும், சகோதரர்களும், எல்லா நேரத்திலும் அமைதி, சகோதரத்துவத்தை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நிசப்தமும், சகஜ நிலையும் மிக விரைவாக திரும்புவது முக்கியமானது.